செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தருமபுரி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், மாதேஷுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டாா்.

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க