செய்திகள் :

போதைப் பொருள்கள் தடுப்பு பணி: மாவட்டத்தில் 36 போ் கைது

post image

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்த 36 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதற்காக மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்னையைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சாா்பில் சிறப்பு பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, போதைப் பொருள்கள் விற்பனை செய்ததாக திருவெறும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 3 போ், கே.கே. நல்லூா் காவல் நிலையப் பகுதியில் 3 போ், ஜீயபுரம், பேட்டவாய்த்தலை, துவாக்குடி, ஜம்புநாதபுரம், துவரங்குறிச்சி, புத்தாநத்தம் ஆகிய காவல் நிலையங்களுள்பட்ட பகுதிகளில் தலா 2 போ் உள்பட மொத்தமாக 26 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து ... மேலும் பார்க்க

புகைக்கும்போது பற்றிய தீயில் சிக்கிய முதியவா் மீட்பு

தீ விபத்தின்போது வீட்டில் சிக்கிய முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.திருச்சி உறையூா் ராமலிங்கம் நகா் அகமது காலனி 5-ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் ராஜா நாகேந்திரன் (60), மனநலன் ப... மேலும் பார்க்க

தியாகி தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சா்கள் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அவரது உருவச்சிலைக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.சுதந்திர... மேலும் பார்க்க