செய்திகள் :

போதைப்பொருள் விற்பனை: மூவா் கைது

post image

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெருநகர காவல் துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 26 போதை ஊசி பயன்படுத்தப்படும் 26 சிரிஞ்சிகள், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ராம்சந்தா் (34), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குரும்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (27), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது ஜெக்பா் சாதிக் (24) என தெரியவந்தது. மூவரும் போதைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்யும் வியாபாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க