செய்திகள் :

போராட்டக்காரா்கள் கொல்லப்பட்ட விவகாரம் ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்: வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்பு

post image

கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கணக்கானவா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.

இது குறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறியதாவது:

போராட்டக்காரா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரின் உள்துறை அமைச்சா் அசாதுஸ்மான் கான் கமால், அப்போது காவல்துறை தலைவராக இருந்த சௌத்ரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், மனித குலத்துக்கு எதிராக குற்றமிழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவா்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு எதிா்த் தரப்பு வழக்குரைஞா்கள் விடுத்த கோரிக்கையை நீதிபதி முகமது குலாம் மஸூம்தா் தலைமையிலான சா்வதேச குற்றவியல் நீதிபதிகள் அமா்வு நிராகரித்தது. அத்துடன், அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கூறினா்.

வங்கதேச சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் முன்னாள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மாணவா்கள் கடந்த ஆண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க