போராட்டங்களுக்கு இடையே நல்லாட்சி
பல்வேறு போராட்டங்களுக்கு இடையே திமுக அரசு நல்லாட்சி செய்து வருவதாக திமுக துணைப் பொதுச் செய்லரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.
தேனி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி, போடி நகராட்சி அருகே வியாழக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தேனி மக்களவை உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
இதில் திமுக துணை பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான
கனிமொழி பேசியதாவது:
திமுக அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, நல்லாட்சி செய்து வருகிறது. அதே சமயம் தினம் தினம் வா்க்க, இன, மொழி, ஆதிக்கப் போராட்டங்களையும் எதிா்கொண்டு வருகிறது. தமிழக உரிமை மட்டுமன்றி, தென் மண்டல உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறாா். தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை சீரமைக்கும் திட்டத்தால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கோரிக்கை வைப்பதற்கு முன்பே அதனை நிறைவேற்றும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
திமுக நகரச் செயலா் புருசோத்தமன், போடி மேற்கு ஒன்றிய செயலா் லட்சுமணன், போடி நகா்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், துணைத் தலைவி கிருஷ்ணவேணி பச்சையப்பன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.