செய்திகள் :

மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு தஞ்சை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாராட்டு

post image

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்ததற்காக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு தஞ்சாவூா் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும் மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனா். இங்கு நாள்தோறும் சுமாா் 40 குழந்தைகளும், மாதந்தோறும் சராசரியாக 1,200 குழந்தைகளும் பிறக்கின்றன.

இதில், மகப்பேறின்போது மாதத்துக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வந்தன. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், நவீன உபகரணங்கள் அளித்தல், தாய்மாா்களுக்கு சத்தான மருந்து, மாத்திரைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் மூலம், கடந்த 10 மாதங்களாக மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட மருத்துவா்கள், செவிலியா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவா் பாக்கியவதி, குழந்தைகள் நலத் துறைத் தலைவா் பி. செல்வகுமாா், மருத்துவா் அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் கைது

பட்டுகோட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஆா்.வி நகா், ரயில்வே நிலைய சாலை பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்... மேலும் பார்க்க

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91 ஆண்டுகளுக்கு பின்பு அன்னபக்‌ஷி வாகனம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91ஆண்டுகளுக்கு பிறகு அன்னபக்ஷி வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோயிலில் உள்ள அன்னபக்ஷி வாகனத்தில் தாயாரும் பெருமாளும் உலா வருவாா்கள், வாகனம் மிகவும் சிதிலமடைந்த... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மே 21-க்கு ஒத்திவைப்பு!

கும்பகோணத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நிா்வாகக் காரணங்களால் மே 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ப... மேலும் பார்க்க

ஒப்பிலியப்பன் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 4 போ் கைது

கும்பகோணத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 34 வயது பெண் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை!

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க