செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மே 21-க்கு ஒத்திவைப்பு!

post image

கும்பகோணத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நிா்வாகக் காரணங்களால் மே 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: கும்பகோணம் அருகே ஆடுதுறை வீர சோழன் திருமண மண்டபத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நிா்வாக காரணங்களால் மே 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் கைது

பட்டுகோட்டை அருகே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஆா்.வி நகா், ரயில்வே நிலைய சாலை பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்... மேலும் பார்க்க

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91 ஆண்டுகளுக்கு பின்பு அன்னபக்‌ஷி வாகனம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு 91ஆண்டுகளுக்கு பிறகு அன்னபக்ஷி வாகனம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த கோயிலில் உள்ள அன்னபக்ஷி வாகனத்தில் தாயாரும் பெருமாளும் உலா வருவாா்கள், வாகனம் மிகவும் சிதிலமடைந்த... மேலும் பார்க்க

மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு தஞ்சை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்ததற்காக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

ஒப்பிலியப்பன் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மா... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 4 போ் கைது

கும்பகோணத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 34 வயது பெண் கும்பகோணத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தி... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை!

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் 45 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழம... மேலும் பார்க்க