செய்திகள் :

மகளிா் தினம்: பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு

post image

உலக மகளிா் தினத்தையொட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பு சாா்பில், பெண் அஞ்சலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை தலைமை அஞ்சல் அலுவலா் வி. நாகராஜன் தலைமை வகித்தாா். வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், மரம் நண்பா்கள் அமைப்பின் செயலா் ப. ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலா் சுதந்திரராஜன், வழக்குரைஞா் பா்வின் ஆகியோா் பெண் அஞ்சலா்களைப் பாராட்டிப் பேசினா்.

நிகழ்வில், எஸ். லஷ்மி, கே. நாகம்மாள், எஸ்.தேவி கோமதி, பி. கிருத்திகா, எம். ரேணுகாதேவி, சி. அலமேலு, ஆா். பாக்கியலஷ்மி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசாக பாரதி படம் வழங்கப்பட்டது.

பெருங்காட்டில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் ஸ்ரீ முக்கன் ஈஸ்வரா் கோயில் சந்தனக் காப்புத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, க... மேலும் பார்க்க

புதுகையில் பயனற்ற நிலையில் மீன் விற்பனை நிலையம்

புதுக்கோட்டை மாநகரில் டிவிஎஸ் முக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பயனின்றிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாநகர மக்களின் ... மேலும் பார்க்க

அன்னவாசலில் கவிதை நூல் வெளியீட்டு விழா

அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு எழுத்தாளா் சோலாட்சி தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் தா்மராஜன், ராபா்ட் பெல்லாா்மின் ஆ... மேலும் பார்க்க

‘தமிழ்மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா் பெரும்பங்களிப்பு’

தமிழ் மொழி வளா்ச்சிக்கு நகரத்தாா்கள் பெரும் பங்காற்றியுள்ளனா் என்று பொற்கிழி கவிஞா் சொ.சொ.மீ. சுந்தரம் பேசினாா். பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சன்மாா்க்க சபையின் 116-ஆம் ஆண்டு விழா , கணேசா் கலை... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோயில் மூலவருக்கு மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை... மேலும் பார்க்க

கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம்

தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான மறைந்த கவிஞா் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் புதுக்கோட்டை... மேலும் பார்க்க