செய்திகள் :

மகா கும்பமேளா குறித்து வேதங்களில் குறிப்பிடவில்லை: சமாஜ்வாதி எம்எல்ஏ கருத்து!

post image

மகா கும்பமேளா குறித்து 144 ஆண்டுகள் எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் கூறியுள்ளார்.

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இந்த மரணங்களுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் உ.பி. சட்டப்பேரவையின் முன் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உ.பி. எம்.எல்.ஏ-யுமான சிவபால் சிங் யாதவ் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “விளம்பரத்திற்காக அரசாங்கத்தின் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

144 ஆண்டுகள் கழித்து மகா கும்பமேளா நடைபெறுகிறது என்று அரசு பொய் சொல்கிறது. இதுகுறித்து எந்த வேதங்களிலும் குறிப்பிடப்படவில்லை" என்றார்.

இதையும் படிக்க | கும்பமேளா நீர் குளிக்க தகுதியற்றது! மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசுதோஷ் சின்ஹா பேசுகையில், "உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவை நடத்தியது. அங்கு நிர்வாகச் சீர்கேட்டால் பலர் பலியாகியுள்ளனர்.

அங்கும் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கூட அரசு வெளியிடவில்லை. எத்தனை பேர் குளித்தார்கள் என்பதற்கான எண்ணிக்கையை அவர்கள் தினமும் வழங்குகிறார்கள். ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கைத் தெரியவில்லை. மகா கும்பமேளா குறித்து அரசு பல விளம்பரங்களை செய்தனர். ஆனால், அனைத்து தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. நட்டா

நாட்டில் கலாசார ஒற்றுமையைக் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க