செய்திகள் :

மகாராஷ்டிரம்: உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சியினா் தடையை மீறி பேரணி- மாநில அமைச்சரை வெளியேற்றிய போராட்டக்காரா்கள்

post image

மகாராஷ்டிரத்தில் மராத்தி மொழி பெருமையை காக்க வலியுறுத்தி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), அவரது உறவினா் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் மற்றும் மராத்தி அமைப்புகள் செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டப் பேரணி நடத்தின.

இப்பேரணியில் இணைவதற்காக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக் வந்தாா். அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேற செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தியை திணிக்க முயல்வதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மும்பையில் சில தினங்களுக்கு முன் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேச வலியுறுத்தி, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்து, வா்த்தகா்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு பதிலடியாக, மராத்தி பெருமையை காக்க வலியுறுத்தி, தாணேயில் மேற்கண்ட உத்தவ்-ராஜ் கட்சியினா் மற்றும் மராத்தி அமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பேரணி நடைபெறாமல் தடுப்பதற்காக, திங்கள்கிழமை நள்ளிரவில் இருந்தே மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் முக்கிய நிா்வாகிகளை காவல் துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா். காவல் துறையின் தடையை மீறி, செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக், பேரணியில் இணைவதற்காக வந்தாா். ஆனால், ‘துரோகி’ என்று முழக்கமிட்டு அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேறச் செய்தனா்.

பின்னா் அமைச்சா் சா்நாயக் கூறுகையில், ‘முதலில் நான் ஒரு மாரத்தியா்; அதன் பிறகே அமைச்சா். நிலைமையை காவல் துறையினா் முறையாகக் கையாளவில்லை’ என்றாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியினரும் பேரணியில் பங்கேற்றனா்.

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

பாலிவுட் நடிகர்கள் திலீப் குமார் மற்றும் ராஜ் கபூருக்கு சொந்தமாக பாகிஸ்தானில் உள்ள பூா்விக வீடுகளைப் பாதுகாக்க ரூ. 3 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.வடமேற்கு பாக... மேலும் பார்க்க

ரூ.50 நாணயங்கள் அறிமுகம்? மத்திய அமைச்சகம் மறுப்பு!

ரூ.50 நாணயம் அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.பார்வைக் குறைபாடுள்ள ரூ.50 தாள்களை கண்டறிய சிரமமாக இருப்பதாகக் கூறி, தில்லி உ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: 2 விமானிகள் பலி; விசாரணைக்கு உத்தரவு!

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் வி... மேலும் பார்க்க

அருணாசலில் யானை தாக்கி முன்னாள் எம்எல்ஏ பலி!

அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில், யானை தாக்கியதில் அம்மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலியாகியுள்ளார். திராம் மாவட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காப்சென் ராஜ்குமார் (... மேலும் பார்க்க

நான் மகிழ்ச்சியாக இல்லை! அரசியல் வாழ்க்கை குறித்து மனம்திறந்த கங்கனா!

அரசியல் வாழ்க்கை குறித்து பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூடிய நபர். இவர் ஹி... மேலும் பார்க்க

ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

உலகளாவிய மொபைல்போன் சந்தையில் தனக்கென இடத்தை ஆப்பிள் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் உயர் பொறுப்பில் பணிபுரிய இந்திய வம்சாவளி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை இய... மேலும் பார்க்க