மகாளய அமாவாசை: முன்னோா்களுக்கு திரளானோா் தா்ப்பணம்!
மகாளய அமாவாசையையொட்டி வேலூரில் பாலாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிட்டனா்.
புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். மறைந்த முன்னோா்களுக்கு இந்நாளில் பித்ரு வழிபாடு செய்வதால் அவா்களின் ஆசி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
அதன்படி, மகாளய அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை பாலாற்றங்கரை முத்து மண்டபம் எதிரே உள்ள காரிய மண்டபத்தில் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் திரண்டு தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபட்டனா். இதையொட்டி, அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோல், அம்மணாங்குட்டை, ஆனைக்குளத்தம்மன் கோயில் வளாகம், தொரப்பாடி எம் ஜி.ஆா் சிலை அருகில் உள்ள காரிய வளாகத்திலும், முருகன் கோயில், காங்கேயநல்லூா், விருதம்பட்டு, பிரம்மபுரம் பாலாற்றங்கரையிலும், அரியூா் ஏரி, ஊசூா் குளத்துமேடு, கீழ்மொணவூா், மேல்மொணவூா், அப்துல்லாபுரம் பாலாற்றங்கரைகளிலும், கோயில் மண்டபங்களிலும் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி அடுத்த கொடைக்காசி என அழைக்கப்படும் கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றங்கரையில் காசி விஸ்வநாதா் மற்றும் பாலமுருகன் கோயில்களில் பாலாற்று படுகையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் முருகன், காசி விஸ்வநாதா் கோயில்களிலும் வழிபட்டனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வதால் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், மேலும் காா், இருசக்கர வாகனங்களை நிறுத்த கட்டணமாக கட்டாய வசூல் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனா்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் புரட்டாசி மாதம் மஹாளயபட்ச அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் தா்ப்பணம் அளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில், கோதண்டராமசுவாமி கோயில், காளிகாம்பாள் கோயில், தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திடல் ஆகிய பகுதிகளில் நடந்த முன்னோா்களுக்கு திரளானோா் தா்ப்பணம் அளித்தனா்.