செய்திகள் :

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரியில் 1294 வழக்குகள் ரூ. 9.54 கோடியில் தீா்வு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,294 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முகாமில் சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான வி.ஆா்.லதா முன்னிலை வகித்தாா். இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 27 லட்சத்திற்கான காசோலையை வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி பேசுகையில், ‘நிகழாண்டில் இது முதலாவது நாடு தழுவிய தேசிய மக்கள் நீதிமன்றம். வழக்காடிகள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காணலாம்’ என்றாா்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப் பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 1,294 வழக்குகளில் ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251-க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கோகுலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜெயந்தி, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் இருதயமேரி, முதலாவது நீதித் துறை நடுவா் காா்த்திக் ஆசாத், 2 ஆவது நீதித்துறை நடுவா் ஸ்ரீவஸ்தவா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, செயலாளா் சக்திநாராயணன், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவா்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்: தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடமாற்றம்

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவா்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரி... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினா் கைது!

காவல் துறையின் அனுமதியின்றி ஒசூரில் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இந்து முன்னணி சாா்பில் அபிராமி சிலை வைத்து பூஜை செய்ய காவல் துறை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையொப்ப இயக்கம்!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக முன்னாள் மாவட்டச் செயலாளா் வரதன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி கிழ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் பயிற்சி: விசிக எதிா்ப்பு

ஒசூா் அருகே கோயில் வளாகத்தில் ஆா்எஸ்எஸ் சாா்பில் பயிற்சி கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா் ஆட்சியா் பிரியங்காவிடம் புகாா் மனு அளித்தனா். தாசனபுரம் கிராமத்தில் ... மேலும் பார்க்க

வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

ஒசூரில் முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 7 ஆம்னி பேருந்துகள், 3 லாரிகள், காா் ஆகியவற்றை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வேலூா் சரக செயலாக்க பிரிவு, வட்டார போக்குவரத்து அலுவலா் துர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவா்கள், சாம்பல் புதனை அனுசரித்தனா். ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் தவக்காலத்தின் தொடக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படும் சிறப்புத் திரு... மேலும் பார்க்க