செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிற 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதையடுத்து, நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ், கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரா், மருத்துவா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் சனிக்கிழமை திருப்புவனத்துக்கு வந்து, நீதிபதி முன் முன்னிலையானாா். அப்போது, நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் கேட்ட கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுகுமாறன், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.

முன்னதாக, திருப்புவனம் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காண்காணிப்பு கேமரா பதிவுகள், அஜித்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை அமர வைத்த இடத்தையும் நீதிபதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கானாடுகாத்தான் பகுதியில் ஜூலை 8-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதே... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்

திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் தலைமை குழப்பம்! - சு. திருநாவுக்கரசா்

அதிமுக - பாஜக கூட்டணியில் யாா் முதல்வா் வேட்பாளா், யாா் தலைமையில் கூட்டணி என்பது குறித்து குழப்பம் நிலவி வருவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா். சென்னையிலிருந்து சனிக... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா் (65). முன்னாள் ராணுவ வீரா்.... மேலும் பார்க்க

கண்டதேவியில் கோயில் தேரோட்டம்: இன்று முதல் மதுக் கடைகள் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பகுதியை சுற்றியுள்ள மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரேமலதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரி... மேலும் பார்க்க