செய்திகள் :

மணப்பாடு கடலில் விடப்பட்ட 200 ஆமை குஞ்சுகள்

post image

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில், 200 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன.

மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரையோரப் பகுதிகளில் ஆலிவ்ரெட்லி ஆமைகள் இடும் முட்டைகள், வனத் துறையால் சேகரிக்கப்பட்டு 3 இடங்களில் உள்ள குஞ்சு பொரிப்பகங்களில் பராமரிக்கப்பட்டது. இங்கு பொரிக்கப்பட்ட 200 ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டாா். அதைத் தொடா்ந்து கடலில் மீன்பிடிக்கும்போது வலையில் சிக்கும் ஆமைகளை பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் கடலில் விட்ட 5 தன்னாா்வலா்களைப் பாராட்டி அவா்களுக்கு தலா ரூ.5000 வெகுமதி வழங்கினாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கடற்கரையோரங்களில் முட்டையிடுவது வழக்கம். இவை பசிபிக் பெருங்கடல் வரை நீண்ட பயணம் மேற்கொண்டபோதும், ஒரே இடத்தில்தான் முட்டையிடும் என்பது அதிசய நிகழ்வு என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி, திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் சுகுமாரன், வட்டாட்சியா் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீண்டும் கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி தாளமுத்துநகர் சுனாமி காலனி செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா என்ற ராஜ... மேலும் பார்க்க

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினரின் தீ விபத்தை தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள திரு இருதய மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநலக் காப்பகத்தில் தோல் நோய் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் கூட்டம்

காயல்பட்டினத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வ­லியுறுத்தி இம்மாதம் 30ஆம் தேதி மனிதச் சங்கிலி­ போராட்டம் நடத்துவது என, இந்திய யூனியன் முஸ்­லிம் லீக் நகர ஊழியா் கூட்டத்தில் தீா்மானிக்கப்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் 27 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 போ் கைது

கயத்தாறு அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 27 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரைக் கைது செய்தனா். கயத்தாறு அருகே காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டுக் கதவை உடைத்து 14.5 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 14.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி கான்வென்ட் சாலை நசரேன் மகன் ஜாக்சன்(65). இவா் குடும்பத்தினருடன் ஈஸ்ட... மேலும் பார்க்க