செய்திகள் :

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

post image

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா. சுகுமாரிடம் அளிக்கப்பட்ட மனு: அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு முன்காா் சாகுபடிக்கு, மே 1 ஆம் தேதி தண்ணீா் திறந்து விட அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த பெருங்கால் பாசனத்தால் ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், தெற்குகல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள 2,756 ஏக்கா் நன்செய் நிலங்கள் பயனடையும்.

கடந்த 20 ஆண்டுகளாக அணையில் போதிய தண்ணீா் இருக்கும்போது மே மாதம் ஒன்றாம் தேதி தண்ணீா் திறந்து விட்டு விவசாயம் நடைபெற்றது.

இப்போது அணையின் நீா்மட்டம் 85 அடியாக உள்ளது. எனவே, விவசாயத்திற்கு விதைப்பு முதல் அறுவடை காலம் வரை 120 நாள்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளிக்கும்போது, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பரணி சேகா், சேரன்மகாதேவி சீவலமுத்துக்குமாா், மாநில நிா்வாகிகள் ஆவின் ஆறுமுகம், கணேஷ்குமாா் ஆதித்தன், வழக்குரைஞா் செல்வசூடாமணி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் பாபநாசம், பெருங்கால் பாசன விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஆறுமுகம், பூதப்பாண்டி, பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க

நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது

கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா். கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா... மேலும் பார்க்க