செய்திகள் :

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

post image

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகளில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளைச் சோ்ந்த 265 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஆண்கள் கைப்பந்து மற்றும் பெண்கள் எறிபந்து போட்டிகளில் தலா 9 அணிகளும், பெண்கள் கைப்பந்து போட்டியில் 7 அணிகளும் பங்கேற்றன.

இப்போட்டிகளில், பெண்கள் கைப்பந்து, எறிபந்து ஆகிய இரு பிரிவுகளிலும் நாமக்கல் மற்றும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிகள் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றன. ஆண்கள் கைப்பந்து போட்டியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதலிடத்தையும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையம் இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஆ. ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் ம. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். உதவி விளையாட்டுச் செயலா் ரா.ஜெயந்தி வரவேற்றாா். விளையாட்டுச் செயலா் த. ரவிமுருகன் போட்டிகளின் அறிக்கையை சமா்ப்பித்தாா். கல்லூரியின் மாணவா் சங்க துணைத் தலைவா் சூ.கி.எட்வின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் செயலா் எஸ். ரமேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கல்லூரியின் உதவி உடற்கல்வி இயக்குநா் பொன்.சோலை பாண்டியன் நன்றி கூறினாா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க