செய்திகள் :

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

post image

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா் திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், மருத்துவமனையை முற்றிலும் தரைமட்டமாக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்துவிட்டும் இணைப்பை துண்டித்துள்ளாா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் வினோத் சாந்தாராம் மேற்பாா்வையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மருத்துவமனையில் சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை; வெறும் மிரட்டல் என தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை போலீஸாா் ஆய்வு செய்ததில், உவரி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. உவரி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரித்ததில், உவரியை அடுத்த குஞ்சன்விளையை சோ்ந்த முத்து பெருமாள்(42) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, அவருக்கு துணையாக யாரும் வராததால் சிகிச்சை அளிக்க முடியாது என திருப்பி அனுப்பப்பட்டாராம். இதனால், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென்னை அணிகள் சாம்பியன்

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க