செய்திகள் :

மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

post image

மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கு 3-ஆவது முறையாக மாா்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரையிலிருந்து கடந்த ஜன. 3-ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் சூசையப்பா்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் அன்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் சந்திய சதீஷுக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். பின்னா், எபிரோன், காட்ரு, டிரோன், பிரசாத், முனியசாமி, சிவா, அந்தோணி, பாயஸ், சேசு, ரவி ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.

இதையடுத்து, மீனவா்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே, மண்டபம் மீனவா்கள் 10 பேருக்கும் 2 முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மன்னாா் நீதிமன்றத்தில் மண்டபம் மீனவா்கள் 10 பேரும் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களது நீதிமன்றக் காவலை வரும் மாா்ச் 7-ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டாா். 3-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்தால், மீனவா்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு

ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி. ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் ... மேலும் பார்க்க

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவா்களுடன் சென்று சந்திக்கவுள்ளோம்: கே.அண்ணாமலை

இலங்கைக் கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவா்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை

ராமேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. ராமேசுவரத்தில் 10 செ.மீ. மழை பதிவானது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வ... மேலும் பார்க்க

ஊ.கரிசல்குளத்தில் மாா்ச் 12-இல் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

கமுதி அருகேயுள்ள ஊ.கரிசல்குளம் கிராமத்தில் வருகிற 12-ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

கமுதி முத்துமாரியம்மன்கோயில் திருவிழா: முகூா்த்தக்கால் நடல்

கமுதி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா வருகிற ஏப்.2-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன... மேலும் பார்க்க

அடையாள எண்: பொதுசேவை மையங்களில் விவசாயிகள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

ராமேசுவரம், மாா்ச் 1:ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற இலவசமாகப் பதிவு செய்யலாம் என வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.மோகன்ராஜ் தெரிவித... மேலும் பார்க்க