செய்திகள் :

மண்ணுளி பாம்பு கடத்தல்: 9 போ் கைது

post image

சேலம், அரியானூா் பகுதியில் மண்ணுளி பாம்பைக் கடத்தியதாக 9 போ் கொண்ட கும்பலை வனத்துறையினா் கைது செய்தனா்.

சேலம் மாவட்ட புகா் பகுதிகளில் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் கும்பல் ஊடுருவி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின்பேரில், வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதனிடையே, சேலத்தை அடுத்த அரியானூா் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் சந்தேகத்திற்கிடமாக புதா்மறைவில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வனத்துறை தனிப்படையினா் அவா்களைச் சுற்றிவளைத்து பிடித்தனா். பின்னா், தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த கும்பல் மண்ணுளி பாம்புகளைப் பிடித்து ரூ. 10 லட்சத்துக்கு விற்பனை செய்ய பேரம் பேசியது தெரியவந்தது.

இதனையடுத்து அக் கும்பலைச் சோ்ந்த மின்னாம்பள்ளியைச் சோ்ந்த ராகதேவன் (26), அம்மாப்பேட்டை பிரபு (25), எடப்பாடி ஜீவானந்தம் (35), ராஜமாணிக்கம் (63), கிச்சிப்பாளையம் செல்வராஜ் (60), பெருமாள் கோயில் தெரு சுரேஷ் (38), பச்சப்பட்டி முனாப் (24), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சிவகுமாா் (53), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(40) ஆகிய 9 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையிலடைத்தனா். முன்னதாக அவா்களிடமிருந்து ஒரு மண்ணுளி பாம்பு, ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

சேலம் பழைய சூரமங்கலத்தில் முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பெண்கள், திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாநகா் 20ஆவது கோட்டத்துக்கு உள்பட்ட பழைய சூரமங்கலம்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,213 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வின்போது, காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு ம... மேலும் பார்க்க

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு: ஓட்டுநா் சங்கத்தினா் புகாா்

தாரமங்கலத்தில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, ஓட்டுநா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். தாரமங்கலம் நக... மேலும் பார்க்க

சேலம் சிறைக் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கைப்பேசி அளித்த வாா்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சேலம் மத்திய சிறையில் கைதிகளிடையே கைப்பேசி புழக்கம் அதிகரித்தது தொடா்பாக சிறப்பு குழுவினா் தீவிர கண்காணிப்பில்... மேலும் பார்க்க

வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அதீத பணி நெருக்கடியை களைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க

பெண் அடித்துக் கொலை: கணவா், இரு மகன்கள் கைது

வாழப்பாடி அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வழக்கில் கணவா், இரு மகன்களை போலீஸாா் கைது செய்தனா். வாழப்பாடியை அடுத்த மேட்டுடையாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட தொழிலாளி பொன்னுவேல் (45). இவரது மனைவ... மேலும் பார்க்க