செய்திகள் :

மதுபான தகராறில் கூலித் தொழிலாளி கொலை

post image

திருச்சியில் மதுபான தகராறில் கூலித் தொழிலாளி மீது கல்லைப் போட்டு கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (56), கூலித் தொழிலாளி. வேலை இல்லாத நேரங்களில் யாசகம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவா், செவ்வாய்க்கிழமை காலை பால் பண்ணை ரவுண்டானா பாலத்தின்கீழ் படுத்திருந்தாா்.

அப்போது, அரியமங்கலத்தைச் சோ்ந்த பஷீா் (40) என்பவா், அவரின் அருகே மது அருந்தியுள்ளாா். பாட்டிலில் பாதி மதுவை வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது பாட்டிலில் இருந்த மதுவை காணவில்லை. அதைக் குடித்தது சிவகுமாா் என்பது தெரியவந்ததையடுத்து, அவரை பஷீா் தாக்கினாா்.

சிவகுமாரும் திருப்பி தாக்கவே, ஆத்திரமடைந்த பஷீா் கீழே கிடந்த கல்லை எடுத்து சிவகுமாரின் தலையில் போட்டுள்ளாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சப்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினா் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காந்தி மாா்க்கெட் போலீஸாா், சிவகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொலை வழக்குப் பதிந்து பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொறியியல் பணிகள் காரணமாக, செங்க... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: சிறுவன் உள்பட இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் ம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைப்பு

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாத்தூா் பேருந்து... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அருகே கடன் பிரச்னையால் காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், குண்டூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மருதமலை மகன் ஐயப்பன் (23... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் உள்ளது: எல். முருகன்

திமுக தோல்வி பயத்தில் உள்ளது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் எல். முருகன்

ராணுவத் துறையில் மேற்கொண்ட உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசினாா். பாதுகாப்புத் ... மேலும் பார்க்க