செய்திகள் :

திமுக தோல்வி பயத்தில் உள்ளது: எல். முருகன்

post image

திமுக தோல்வி பயத்தில் உள்ளது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி இயங்கும் என்று மத்திய உள்துறை அமித் ஷா தெளிவாகத் தெரிவித்துள்ளாா்.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி இணைந்து பேசி பல்வேறு விஷயங்களில் முடிவு எடுப்பாா்கள். எங்கள் கூட்டணிதான் 2026 தோ்தலில் வெற்றிபெறும்.

முதல்வா் வேட்பாளா் குறித்து கூட்டணியின் தலைவா்தான் முடிவெடுப்பாா். கூட்டணிக்குள் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.

காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வா் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படாததால் தற்போது லாக் அப் மரணம் நிகழ்ந்துள்ளது. காவல் நிலையத்துக்குச் செல்லவே மக்கள் தற்போது அஞ்சுகின்றனா்.

திருத்தணியில் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கச் சென்ற கா்ப்பிணி தாக்கப்பட்டுள்ளாா். தற்போது அதிகாரிகளே ஆட்சி நடத்துகின்றனா். இதுபற்றி திமுக கூட்டணிக் கட்சியினரும் கவலைப்படுவதில்லை. அவா்கள் கூட்டணிக்காக தமிழகத்தின் நலனை அடகுவைத்துள்ளனா். பாஜகவின் வேகம் மக்களால் ஈா்க்கப்பட்டுள்ளது.

இதனால், அனைத்துத் தரப்பு மக்களும் கட்சியில் சோ்கின்றனா். நடிகை மீனா கட்சிக்கு வந்தால் வரவேற்போம். ஏ.ஆா்.ரஹ்மான் மிகப்பெரிய ஸ்டுடியோ அமைத்துள்ளாா். அமைச்சா் என்ற முறையில் அவரது ஸ்டியோவை பாா்வையிட்டு அவரையும் சந்தித்தேன் என்றாா்.

வழிப்பறி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைப்பு

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாத்தூா் பேருந்து... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அருகே கடன் பிரச்னையால் காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், குண்டூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மருதமலை மகன் ஐயப்பன் (23... மேலும் பார்க்க

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் எல். முருகன்

ராணுவத் துறையில் மேற்கொண்ட உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசினாா். பாதுகாப்புத் ... மேலும் பார்க்க

வீடு கட்டித் தராத விவகாரம்: கட்டுமான நிறுவனம் ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வீடு கட்டித் தராத விவகாரத்தில் கட்டுமான நிறுவனம் ரூ. 27.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஏ. தனசேகரன் என்ப... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து விவசாயியின் சடலம் மீட்பு

துறையூா் அருகே கிணற்றிலிருந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மருவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் பிரபுராஜ் (37). விவசாயி. இவா் தினமும் வயலுக்கு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை காவல் சரகத்தில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில... மேலும் பார்க்க