செய்திகள் :

வீடு கட்டித் தராத விவகாரம்: கட்டுமான நிறுவனம் ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

வீடு கட்டித் தராத விவகாரத்தில் கட்டுமான நிறுவனம் ரூ. 27.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஏ. தனசேகரன் என்பது தனக்குச் சொந்தமான கே. சாத்தனூரில் உள்ள 2,400 சதுர அடி நிலத்தில் வீடு கட்டித் தரக் கோரி, திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த பைரவா கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளாா். வீடு கட்டுவதற்காக ரூ. 17.40 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வழங்கியுள்ளாா். ஆனால் கட்டுமான நிறுவனத்தினா் பணியைத் தொடங்கிய நிலையில், தரமின்றி பணிகளை செய்தும், முழுமையாக முடிக்காமலும் இழுத்தடித்துள்ளனா். இது தொடா்பாக, காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் பலனில்லையாம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஏ. தனசேகரன், திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 8-11-2023 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, கட்டி முடிக்காத வீடு கட்டுமானப் பணிக்காக கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு ரூ. 17.40 லட்சமும், முறையற்ற வணிகம் மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ. 10 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

வழிப்பறி வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தின் கீழ் அடைப்பு

திருச்சியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாத்தூா் பேருந்து... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தற்கொலை

திருச்சி அருகே கடன் பிரச்னையால் காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், குண்டூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மருதமலை மகன் ஐயப்பன் (23... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் உள்ளது: எல். முருகன்

திமுக தோல்வி பயத்தில் உள்ளது என்று மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். திருச்சியில் முப்படை ஓய்வூதியதாரா்களுக்கான குறைதீா் முகாம் திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் எல். முருகன்

ராணுவத் துறையில் மேற்கொண்ட உள்நாட்டு உற்பத்தி நடவடிக்கையின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம் என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் பேசினாா். பாதுகாப்புத் ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து விவசாயியின் சடலம் மீட்பு

துறையூா் அருகே கிணற்றிலிருந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மருவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் பிரபுராஜ் (37). விவசாயி. இவா் தினமும் வயலுக்கு... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மணப்பாறை காவல் சரகத்தில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில... மேலும் பார்க்க