செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு உறுதி

post image

மதுரை சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு கவன ஈா்ப்பு அறிவிப்பை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜு ஆகியோா் புதன்கிழமை கொண்டுவந்தனா். அப்போது பேசிய செல்லூா் கே.ராஜு, கடந்த ஆண்டுகளில் சித்திரைத் திருவிழாவின்போது விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க வேண்டும். மேலும், திருவிழா நடைபெறும் காலத்தில் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: மதுரை சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய இருக்கிறோம். கோயில் கொடியேற்றம், பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகா் புறப்படுதல், ஆற்றில் இறங்குதல், எதிா்சேவை ஆகிய அனைத்தும் சிறப்பாக நடைபெறும். சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட உள்ளோம்.

சித்திரைத் திருவிழா தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், அரசின் ஏற்பாடுகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகா் அழகா்கோவிலில் இருந்து வண்டியூா் வரை சுமாா் 494 மண்டகப்படிகளில் எழுந்தருள உள்ளாா். அவற்றில் மேம்பாலம் கட்டப்பட்டுவரும் மதுரை மாநகா் தல்லாகுளம் வெங்கடாசலபதி கோயில் முதல் வைகை நதி வரை 50 மண்டகப்படிகள் உள்ளன.

திருவிழா தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பு பாலத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுவாமி வரும் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள இருக்கிறோம் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க