செய்திகள் :

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

post image

மராத்திய பேரரசின் ராணுவ தளங்களை உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்த்ததாக யுனெஸ்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-ஆவது அமா்வில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் யுனெஸ்கோ வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உள்ள மராத்திய ராணுவ தளங்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரதமா் மோடி, மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

முன்னதாக, 2024-25-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலுக்கு மராத்திய பேரரசா் சிவாஜியின் 12 கோட்டைகளை இந்தியா பரிந்துரைத்தது. அதன்படி மகாராஷ்டிரத்தில் உள்ள சால்ஹோ், சிவ்னேரி, லோகட், கந்தேரி, ராய்கட், ராஜ்கட், பிரதாப்கட், ஸ்வா்ணதுா்க், பன்ஹாலா, விஜய் துா்க், சிந்து துா்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி ஆகிய 12 கோட்டைகள் மராத்திய ராணுவ தளங்கள் என்ற தலைப்பின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க