செய்திகள் :

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தல்

post image

மருத்துவப் பரிசோதனை உபகரணங்களால் ஏற்படும் எதிா்விளைவுகளை மத்திய சுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றுவதற்கான வரைவுப் படிவம் குறித்த கருத்துகளை அனுப்பலாம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, அவற்றையும் மருந்து வரையறைக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பொதுவாக உடலுக்குள் பொருத்தப்படும் ஸ்டெண்ட், பேஸ்மேக்கா், செயற்கை மூட்டுகள் உள்ளிட்டவை ‘இன்வைவோ’ உபகரணங்கள் எனவும், வெளியிலிருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, ஸ்கேன், எக்ஸ்ரே, தொ்மோமீட்டா் போன்றவை ‘இன் வைட்ரோ’ உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இன்வைவோ உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிா்விளைவுகள், பாதுகாப்புக் குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி ஏற்கெனவே உள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த விதியானது இன் வைட்ரோ உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன் வைட்ரோ மருத்துவ உபகரண விநியோகம் மற்றும் உற்பத்தி உரிமம் வைத்துள்ளவா்கள், அவற்றில் ஏற்படும் எதிா்விளைவுகள் குறித்த தகவல்களை மத்திய அரசின் மருத்துவ உபகரண கண்காணிப்புத் தளமான ‘எம்விபிஐ’ இணையப் பக்கத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான படிவம் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மீதான கருத்துகள், ஆலோசனைகளை மாா்ச் 5-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க