செய்திகள் :

``மறுக்கப்படும் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை..?'' - தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

post image

"எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழஙகாமல் தாமதித்தும், பெயர்களை நீக்கியும் வஞ்சிக்கிறது" என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டித்துள்ளது.

உதவித்தொகை

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், "1954-1955 ம் ஆண்டில் தொடங்கப்பபட்ட NOS (National Overseas Scholarship) திட்டத்தின் கீழ் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், குற்றப் பழங்குடிகள் என்று அறிவிக்கப்பட்ட நாடோடி பழங்குடியினர் (DNT), அரை நாடோடி பழங்குடியினர், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் அல்லது பாரம்பரிய கைவினைஞர் பிரிவுகளைச் சேர்ந்த, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2025-26 கல்வியாண்டில் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி ஏழை மாணவர்கள் 106 பேரில் 40 பேருக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கியுள்ளது.

இது மட்டுமல்ல, கிறிஸ்துவ, இஸ்லாமிய, புத்த, ஜைன, சீக்கிய, பார்சி இன மாணவர்களுக்கு வழங்கப்படுகிற மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தில் (MANF), 1400-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள் பல மாதங்களாக உதவித்தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

உயர் கல்வி

அதே போல் பட்டியல் சாதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தேசிய கல்வி உதவித் தொகைக்கான பட்டியலே ஏப்ரல் 2025 வரை வெளியிடப்படாமல் தாமதிக்கப்பட்டது. அதில் கூட, முதலில் தேர்வு செய்யப்பட்ட 806 மாணவர்களில் 487 மாணவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது மாணவர்களின் உயர் கல்விக்கு எதிரான சதிச்செயலாகும்.

எஸ்.சி/எஸ்.டி ஏழை, குற்றப்பழங்குடிகள், சிறுபான்மை மாணவர்களின் கல்வி நலன்களுக்கு எதிரான இத்தகைய தீய நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு உயர்தனிச் செம்மல் விருது; வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை கவுரவிப்பு

அமெரிக்காவின் வடகரோலினாவில் உள்ள ராலேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் உயர்கல்வி வளர்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநா... மேலும் பார்க்க

``JEE -ல் 75 -வது ரேங்க்; மும்பை ஐஐடியில் இடம், ஏரோநாட்டிக்கல் கனவு..'' - பட்டாசு தொழிலாளியின் மகள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், படந்தால் அரசு பள்ளியில் பயின்ற யோகேஸ்வரி. அவரது தாய் பட்டாசு ஆலை தொழிலாளி, தந்தை டீக்கடை தொழிலாளி. அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ... மேலும் பார்க்க

Yoga Day: வேளாளர் மகளிர் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி; நூற்றுக்கணக்கான மாணவிகள் பங்கேற்பு |Photo Album

யோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயிற்சியோகா பயி... மேலும் பார்க்க

``ஊதியம் வழங்க முடியவில்லை என்றால்.. அரசின் பங்கு என்ன?'' - மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்

பல்வேறு புகார்கள், சர்ச்சைகளால் கல்வி தரத்தையும், மதிப்பையும் இழந்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஓய்வுவூதியர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக... மேலும் பார்க்க

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்சியர்!

இந்த ஆண்டு தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் IIT, NIT, IIIT, CLAT, AIIMS நர்சிங்‌ என நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்... மேலும் பார்க்க