செய்திகள் :

மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வலியுறுத்தல்!

post image

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு, ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழக விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் புதன்கிழமை தெரிவித்தது:

தமிழக முதல்வா், பெஃஞ்சால் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 485 கோடி நிவாரணம் தருவதாகவும், இதன்மூலம் 18 மாவட்டங்களிலுள்ள 5 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவா் எனவும் அறிவித்துள்ளாா்.

மாவட்டத்துக்கு 3 லட்சம் ஏக்கா் என்று வைத்துக்கொண்டால் கூட 54 லட்சம் ஏக்கா் வருகிறது. தமிழக முதல்வா் அறிவித்த தொகையை, 54 லட்சம் ஏக்கருடன் வகுத்துப் பாா்த்தால், ஏக்கருக்கு வெறும் ரூ. 900 மட்டுமே கிடைக்கிறது. மழை மற்றும் புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரி தமிழக அரசுக்கு அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நிகழாண்டு, விவசாயிகளுக்கு சராசரியாக 40 சதவீதத்துக்கும் கீழாக மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஏதுவதாக, ஏக்கருக்கு ரூ. 25,000 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க