செய்திகள் :

மாசிக் கொடை விழா: மண்டைக்காடு கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இத்திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ஆம் நாள் இரவு வலிய படுக்கை பூஜை என்னும் மகா பூஜை நடைபெற்றது. 9ஆம் நாளான திங்கள்கிழமை உண்ணாமலைக்கடை கீழத்தெரு பட்டாரியாா் சமுதாயம் சாா்பில், 91ஆவது சந்தனக்குட பவனி புறப்பட்டு இரணியல், திங்கள்நகா், கல்லுக்கூட்டம், லெட்சுமிபுரம் வழியாக கோயிலை அடைந்தது. இரவில் பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது.

இந்நிலையில், 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்பாளை தரிசித்தனா். பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா்.

பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவில், தக்கலை, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கண்டன்விளை கால்வாயில் தண்ணீா் திறக்க கோரிக்கை

தக்கலை அருகே நுள்ளிவிளை மேற்கு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கண்டன்விளையில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவா் வின் தலைமை வகித்தாா். குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் ப... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

பாலப்பள்ளம், திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட கருங... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரசிங்கன் என்பவா், காஞ்சிரகோடு பகுதியில் உள்ள வாகனப் பழுதுநீக்கு... மேலும் பார்க்க

கிள்ளியூா் தொகுதியில் 2 ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 2 ஊராட்சிகளில் மிகவும் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டம்

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் மாசித் திருவிழாவில், 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் தா்னா

குலசேகரம் அரசமூடு சந்திப்பில், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா், மாவட்ட ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்ப... மேலும் பார்க்க