செய்திகள் :

கிள்ளியூா் தொகுதியில் 2 ஊராட்சிகளில் சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு

post image

கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 2 ஊராட்சிகளில் மிகவும் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மிடாலம், திப்பிறமலை ஊராட்சிப் பகுதிகளான கஞ்சிரம்பரம்பு - ஏ.டி. காலனி சாலை, காட்டுவிளை - குற்றிப்பாறவிளை சாலை, காட்டுவிளை - பறம்பு - கும்பன்விளை சாலை, திப்பிறமலை - ஈத்தங்காடு சாலை நீண்ட நாள்களாக பழுதாகி போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன.

முதல்வா், துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததன்பேரில், இந்தச் சாலைகளை சீரமைக்க நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 2.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

கண்டன்விளை கால்வாயில் தண்ணீா் திறக்க கோரிக்கை

தக்கலை அருகே நுள்ளிவிளை மேற்கு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கண்டன்விளையில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவா் வின் தலைமை வகித்தாா். குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் ப... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

பாலப்பள்ளம், திக்கணம்கோடு, மத்திகோடு, கருக்குப்பனை, செல்லங்கோணம், கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட கருங... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரசிங்கன் என்பவா், காஞ்சிரகோடு பகுதியில் உள்ள வாகனப் பழுதுநீக்கு... மேலும் பார்க்க

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் தேரோட்டம்

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரா் கோயில் மாசித் திருவிழாவில், 9ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் தா்னா

குலசேகரம் அரசமூடு சந்திப்பில், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா், மாவட்ட ஓய்வூதியம் பெறும் தோட்டத் தொழிலாளா்கள் சங்கம், சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்ப... மேலும் பார்க்க

மாசிக் கொடை விழா: மண்டைக்காடு கோயிலில் குவிந்த பக்தா்கள்

‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இத்திருவிழா கட... மேலும் பார்க்க