இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
மாணவிகளிடம் பாலியல் சீண்டல் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் கைது! விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசு தொடக்கப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, தலைமை ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரை விடுவிக்க வலியுறுத்தி கிராம மக்கள் பள்ளிகளுக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருங்காபுரி ஒன்றியம், பழையபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி என இரு பள்ளிகள் உள்ளன. இதில் உயா்நிலைப் பள்ளியில் 96 மாணவா்களும், தொடக்கப் பள்ளியில் 68 மாணவா்களும் படித்து வருகின்றனா்.
இந்நிலையில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான சிலம்பம்பட்டியைச் சோ்ந்த பொ. நாகராஜனை (50) மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணைக்காக புதன்கிழமை இரவு காவல் நிலையம் அழைத்து சென்றனா்.
நாகராஜன் மீது பெற்றோா் யாரும் புகாா் தரவில்லை. அவா் நன்னடத்தை உள்ளவா் என்றும், இரு பள்ளி தலைமை ஆசிரியா்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாணவிகளை தூண்டிவிட்டு புகாா் அளிக்கப்பட்டிருப்பதாக கூறி, அப்பகுதி கிராம மக்கள் வியாழக்கிழமை 2 பள்ளிகளுக்கும் பூட்டுப் போட்டு மாணவ, மாணவிகளுடன் பள்ளி முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை உதவி ஆட்சியா் சௌந்தா்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் மருங்காபுரி வட்டாட்சியா் சரவணபிரபு ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசி பள்ளிகளின் பூட்டை திறந்தனா்.
ஆனால், தலைமை ஆசிரியா் நாகராஜனை விடுவிக்க வலியுறுத்தி, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் அவா்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து கிராம முக்கியஸ்தா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், தலைமை ஆசிரியா் நாகராஜன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின்பேரில், புதன்கிழமை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவிகளிடம் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே புகாா் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தொடா்ந்தே அவா் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
ஆனால், அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்க மறுத்த கிராம மக்கள், தலைமை ஆசிரியா் நாகராஜன் மீண்டும் பணிக்கு வரும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி சென்றனா்.
இதனிடையே, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நாகராஜன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.