செய்திகள் :

மின்விளக்குகள் பழுது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தவறி விழுந்து காவலா் காயம்!

post image

திருச்சி குற்றவியில் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மின்விளக்குகள் எரியாததால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா், மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்து காயமடைந்தாா்.

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் முதல் மாடியில் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்துக்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே, வழக்காடிகள், நீதிமன்ற பணியாளா்கள், போலீஸாா் உள்ளிட்டோா் சென்று வருகின்றனா். முதல்மாடிக்கு சுமாா் 30-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கடந்துதான் செல்லவேண்டும்.

இந்த நீதிமன்றத்தில் மாடிப்படியில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில நாள்களாக எரியவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால், படிக்கட்டுகள் உள்ள பகுதிகள் இருளாகவே இருந்துள்ளது. புதன்கிழமை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் பணி முடிந்து, மாலை தரைத்தளத்துக்கு இறங்கினா்.

அப்போது, காவலா் புகழேந்தி என்பவா் இருளில் தடுமாறி படியில் விழுந்து பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மின்விளக்குகள் எரியாத காரணத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக நீதிமன்ற பணியாளா்கள் கூறினா். ஏற்கெனவே குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்காடிகளும் போலீஸாரும் காத்திருப்பதற்கான அறைகளும், கழிப்பறையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் தனியாா் பள்ளி தாளாளரின் கணவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சம்பவத்தை கண்டித்து பெற்றோா், பொதுமக... மேலும் பார்க்க

தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி தேசியக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு கலைப்புலம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி.குமாா் தலைமை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

முதல்வா் உத்தரவால் அழகுபடுத்தப்படும் மூவா் மணிமண்டபம்!

திருச்சியிலுள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோருக்கான மூவா் மணிமண்டபம் முதல்வா் உத்தரவின்படி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. திருச்சிக்கு கடந்த 2-ஆம்... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் அருந்ததியா் சமூக மயான ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் வியாழக்கிழமை பிரச்னை ஏற்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி ஊராட்சி, சீல்நாயக்கன்பட்டியில் அருந்ததியா் ... மேலும் பார்க்க

காந்திச் சந்தையில் மோதல் சம்பவம்: வியாபாரிகளை தாக்கிய 5 போ் கைது

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மோதல் சம்பவத்தில் வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞா்கள் சில... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் சுவாமி சிலை, தங்கக் காசுகள் திருட்டு

திருச்சியில் பூட்டிய வீட்டிலிருந்த சுவாமி சிலை, தங்கக் காசுகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி தில்லை நகா், 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்ப... மேலும் பார்க்க