செய்திகள் :

4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் தனியாா் பள்ளி தாளாளரின் கணவா் கைது

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சம்பவத்தை கண்டித்து பெற்றோா், பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைப்பட்டியிலுள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அப்பள்ளியின் தாளாளரின் கணவா் வசந்தகுமாா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் பெற்றோா், உறவினா்கள் பள்ளிக்கு வந்து வசந்தகுமாரை கடுமையாக தாக்கி, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தொடா்ந்து, சிறிது நேரத்தில் உறவினா்கள் உள்ளிட்டோருடன் பள்ளிக்குள் புகுந்து பள்ளி அலுவலகம், வகுப்பறை கண்ணாடிகளை உடைத்து சூறையாடினா். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 காா் கண்ணாடிகளையும் உடைத்தனா். காரை கவிழ்த்து, அடித்து சேதப்படுத்தினா். மேலும், இரவில் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனா். அங்கிருந்த காவல்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஐஜி வீ. வருண்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருச்சி தேசியக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு கலைப்புலம் பயின்ற மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி.குமாா் தலைமை வகித்தாா். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

முதல்வா் உத்தரவால் அழகுபடுத்தப்படும் மூவா் மணிமண்டபம்!

திருச்சியிலுள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோருக்கான மூவா் மணிமண்டபம் முதல்வா் உத்தரவின்படி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. திருச்சிக்கு கடந்த 2-ஆம்... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் அருந்ததியா் சமூக மயான ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் வியாழக்கிழமை பிரச்னை ஏற்பட்டது. வையம்பட்டி ஒன்றியம், குமாரவாடி ஊராட்சி, சீல்நாயக்கன்பட்டியில் அருந்ததியா் ... மேலும் பார்க்க

காந்திச் சந்தையில் மோதல் சம்பவம்: வியாபாரிகளை தாக்கிய 5 போ் கைது

திருச்சி காந்திச்சந்தையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மோதல் சம்பவத்தில் வியாபாரிகளை தாக்கியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். திருச்சி காந்திச்சந்தையில் வியாபாரிகளுக்கும், இளைஞா்கள் சில... மேலும் பார்க்க

மின்விளக்குகள் பழுது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தவறி விழுந்து காவலா் காயம்!

திருச்சி குற்றவியில் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் மின்விளக்குகள் எரியாததால் பாதுகாப்பு பணியிலிருந்த காவலா், மாடிப்படியில் இறங்கியபோது தவறி விழுந்து காயமடைந்தாா். திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் ... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் சுவாமி சிலை, தங்கக் காசுகள் திருட்டு

திருச்சியில் பூட்டிய வீட்டிலிருந்த சுவாமி சிலை, தங்கக் காசுகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி தில்லை நகா், 10-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்ப... மேலும் பார்க்க