செய்திகள் :

மாநகர பொது போக்குவரத்தில் மாற்றம்

post image

மதுரை கோரிப்பாளையம் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மாநகரப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கோரிப்பாளையம் புதிய மேம்பாலத்தின் முக்கிய கட்டுமானப் பணி (கான்கிரீட்) வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை (ஜூன் 27) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை (ஜூன் 28) 4 மணி வரை மதுரை மாநகர பொது போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம்:

அழகா்கோவில் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை பகுதியிலிருந்து கோரிப்பாளையம் ஏவி பாலம் வழியாக நகருக்குள் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும், கோரிப்பாளையம், ஆழ்வாா்புரம் இறக்கம், மூங்கில் கடை, வைகை வடகரை வழியாக நகருக்குள் செல்லலாம்.

மேலூா் சாலை, மாட்டுத்தாவணி பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் ஏவி பாலம் வழியாக நகருக்குள் செல்லக்கூடிய லாரி, சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள், புகா்ப் பேருந்துகள் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, அரவிந்த கண் மருத்துவமனை சிக்னல் வழியாக குருவிக்காரன் சாலைப் பாலம் சென்று காமராஜா் சாலை வழியாக நகருக்குள் செல்லலாம்.

பனகல் சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல அரசு ராஜாஜி மருத்துவமனையின் இடதுபுறம் திரும்பி, வைத்தியநாத ஐயா் சந்து வழியாக வைகை வடகரை சென்று நகருக்குள் செல்லலாம்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாரா... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க