செய்திகள் :

மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

குடிநீா் குழாய் உடைப்பு காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீா்த்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாயில் யாத்ரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்யும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சனிக்கிழமை சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

இதன்படி, மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ் நகா் புதியது, ஜே.கே. நகா், செம்பட்டு, இ.பி. காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது-பழையது, அன்புநகா் பழையது- புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல்நகா் புதியது-பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது-பழையது, ரயில் நகா் புதியது-பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது-பழையது, மேலக் கல்கண்டாா் கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேலக்கல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி, பொன்னேரிபுரம் புதியது-பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்ஐசி புதியது, கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த நகா், விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமணிய நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை ஒருநாள் இருக்காது. ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.

காமராஜா் நூலகப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சி அறிவுசாா் மையத்தில் அமைச்சா் ஆய்வு

திருச்சி மாநகராட்சி சாா்பில், 53-ஆவது வாா்டு குதுபா பள்ளத்தில் ரூ. 2.57 கோடியில் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டிலுள்ள அறிவுசாா் மையத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை ஆ... மேலும் பார்க்க

திருவிழாவை நடத்தக் கோரி போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தே.துலுக்கம்பட்டியில் நடைபெறவிருந்த பாம்பாலம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான காப்புக் கட்டு செவ்வாய்க்கிழமை இரவு இரு தரப்பு கருத்து வேறுபாட்டால் நின்றுபோனது.... மேலும் பார்க்க

மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

முசிறி அருகே, மாங்கரைப்பேட்டையிலுள்ள ஸ்ரீ மாங்கனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாங்கரைபேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்... மேலும் பார்க்க

திருச்சியில் காவேரி புற்றுநோய் மருத்துவமனை திறப்பு

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள காவேரி கேன்சா் இன்ஸ்டிட்யூட் எனும் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த புதிய மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் திருட்டு வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி சமயபுரம் அருகேயுள்ள அகிலங்காபுரம், ஸ்ரீ மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் செழியன் ... மேலும் பார்க்க