Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
குடிநீா் குழாய் உடைப்பு காரணமாக, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் சனிக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீா்த்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீா் குழாயில் யாத்ரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால், அதை சரி செய்யும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சனிக்கிழமை சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.
இதன்படி, மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ் நகா் புதியது, ஜே.கே. நகா், செம்பட்டு, இ.பி. காலனி, காஜாமலை பழையது, ரெங்காநகா், சுப்ரமணிய நகா் புதியது, வி.என். நகா் புதியது, தென்றல் நகா் புதியது, கவிபாரதி நகா், காமராஜ் நகா், கிராப்பட்டி புதியது-பழையது, அன்புநகா் பழையது- புதியது, எடமலைப்பட்டிபுதூா் புதியது, பஞ்சப்பூா், அம்மன் நகா், தென்றல்நகா் புதியது-பழையது, அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் புதியது-பழையது, ரயில் நகா் புதியது-பழையது, முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது-பழையது, மேலக் கல்கண்டாா் கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேலக்கல்கண்டாா் கோட்டை நாகம்மை வீதி, பொன்னேரிபுரம் புதியது-பழையது, அம்பேத்கா் நகா், விவேகானந்தா் நகா், எல்ஐசி புதியது, கே.சாத்தனூா், தென்றல் நகா், ஆனந்த நகா், விஸ்வநாதபுரம் மற்றும் சுப்ரமணிய நகா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை ஒருநாள் இருக்காது. ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.