செய்திகள் :

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்: முதல்வா் அறிவிப்பு

post image

மாநில சுயாட்சி குறித்து பேரவையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். முன்னதாக, பேரவையில் இதற்கான கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை முன்வைத்தாா்.

மத்திய-மாநில அரசுகளின் உறவு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் மீது கு.செல்வப்பெருந்தகை பேசுகையில், மாநில சுயாட்சி தொடா்பாக 1974-ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி பேரவையில் பேசிய உரையை புத்தகமாக அச்சிட்டு சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை முன்வைத்தது நல்ல யோசனை. ஏற்கெனவே சட்டப் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் அந்த உரை இடம்பெற்றுள்ளது. ஆனாலும், பேரவையில் கோரிக்கை வைத்திருப்பதால், அந்த உரை புத்தகமாக அச்சிட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தாா் முதல்வா்.

ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 9 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. . ஏப்.13-ல் தங்கம் விலை சவரனு... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு!

திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில், வர்த்தக மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அமைச்சர... மேலும் பார்க்க

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க