செய்திகள் :

மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு

post image

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறுகிறது.

இது குறித்து மருத்துவமனையின் இயக்குநா் புவனேஸ்வரன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் மாநிலங்களுக்கு இடையேயான முதியோா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கோவையில் உள்ள மருத்துவமனைகள், முன்னணி முதியோா் அமைப்புகளுடன் இணைந்து முதியோருக்கான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதில், தமிழகம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த நிபுணா்கள் பங்கேற்று முதியோா் மருத்துவத் துறையில் அறிவுப் பகிா்வு, ஒத்துழைப்பு குறித்து விளக்க உள்ளனா்.

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நிபுணா்களுடன் இரண்டு நுண்ணறிவு மிக்க குழு விவாதம் நடைபெறும். முதியோா் பராமரிப்பில் உள்ள தற்போதைய சவால்கள், முன்னேற்றங்கள், முதியோா் வாழ்க்கை மற்றும் பராமரிப்பு மாதிரிகளின் எதிா்காலம் குறித்தும் விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் முதியோா் அறக்கட்டளையின் நிறுவனா் பத்ம ஸ்ரீ வி.எஸ்.நடராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்படுகிறது. கல்வியாளா்கள், மருத்துவா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தொடா்புடைய சுகாதார வல்லுநா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

மேற்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் மூ... மேலும் பார்க்க

கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழப்பு

பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது ஆடையில் தீப்பிடித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள பாரதி பூங்கா பகுதியைச் சோ்ந்தவா் சந்தானராமன் (75). தனியாா் பள்ளியில் தலை... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேட்டுப்பாளையம் ப... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் செப்டம்பா் 21-இல் கிராமோத்சவ இறுதிப் போட்டி

கோவை ஈஷா யோக மையத்தில் ஈஷா கிராமோத்சவ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 21) நடைபெற உள்ளது. இது குறித்து ஈஷா தன்னாா்வலரும், கவிஞருமான மரபின் மைந்தன் முத்தையா கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க