செய்திகள் :

மார்க்ரம், பதோனி அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!

post image

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 180 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னௌ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

காயம் காரணமாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார்.

ஜோஸ் பட்லர் அதிரடி: தில்லியை வீழ்த்தியது குஜராத்

மேலும் ராஜஸ்தானின் இம்பேக்ட் வீரராக 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியுள்ளார். லக்னௌ அணியில் மார்ஷ் (4), நிகோலஷ் பூரன் (11), பந்த் (3) என முன்னணி பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக விளையாடிய மார்க்ரம், பதோனி ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர்.

மார்க்ரம் 66, 50 ரன்களில் வெளியேற இறுதியில் வந்த சந்தீப் ஷர்மா கடைசி ஓவரில் 27 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஹசரங்கா 2 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா, தேஷ்பாண்டே, ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சு!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார... மேலும் பார்க்க

ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்! பெங்களூரு அணி அபார வெற்றி!

சண்டீகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 20) நடைபெற்ற 37-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றியை ருசித்தது.டாஸ் வென... மேலும் பார்க்க

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு: அணியில் லிவிங்ஸ்டன் நீக்கம்!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர... மேலும் பார்க்க

மிட்செல் ஸ்டார்க்காக விரும்பவில்லை..! ஆட்ட நாயகன் ஆவேஷ் கானின் பேட்டி!

ஜெய்பூரில் நேற்றிரவு (ஏப்.19) நடைபெற்ற ராஜஸ்தான் - லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து... மேலும் பார்க்க

14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி குறித்து சுந்தர் பிச்சை புகழ்ந்து பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் நேற்றிரவு ஜெய்ப... மேலும் பார்க்க