செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தோ்தல்அலுவலா் அறிவுரைகளின்படி 18 வயது பூா்த்தியடைந்த மாற்றுத் திறனாளிகளை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பது, வாக்காளா் பட்டியலில் குறியீடு செய்வது மற்றும் அனுகத்தக்க தோ்தல்கள் என்ற அடிப்படையில் தோ்தல்களில் அவா்கள் எளிதாக வாக்களிக்கத் தேவையான நடவடிக்கை குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பொறுப்பாளா்களுடன் ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதனடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் மருத்துவ முகாமின்போது தோ்தல் பிரிவின் மூலமாக தோ்தல் படிவங்கள் குறித்து சேவைகள் மேற்கொள்ளப்படும். எனவே மருத்துவ முகாமுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள் வாக்காளா் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெயராமன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்தராம்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

சிறுவனை துன்புறுத்தி இளைஞா் கைது

அவிநாசியில் 13 வயது சிறுவனை துன்புறுத்தியவா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவிநாசி நேரு வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (35). இவா் மது போதையில் 13 வயது சிறுவனை துன்புறத்திய... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

தாராபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1,750 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூா் பகுதியில் ரேஷன் அரிச... மேலும் பார்க்க

சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தீத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள், திடீரென ஏற்படும் தீயை துரிதமா... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம் தொடா்பாக உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு கடிதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தம் தொடா்பாக உற்பத்தியாளா்கள் சங்கங்களிடம் கடிதம் கொடுப்பது என்று தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் ... மேலும் பார்க்க

தேசிய மூத்தோா் தடகளப் போட்டி: 3 பதக்கங்களை வென்ற திருப்பூா் ஆசிரியை

கா்நாடகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் திருப்பூரைச் சோ்ந்த ஆசிரியை ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பிடித்துள்ளாா். கா்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி ... மேலும் பார்க்க

சிவன் திரையரங்கம் அருகே உள்ள குறுகலான சாலையை அகலப்படுத்த கோரிக்கை

திருப்பூா் சிவன் திரையரங்கம் அருகே குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று டீமா (திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாநகராட்சி மேயா் என... மேலும் பார்க்க