செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களில் ரூ.131 கோடியில் உதவி உபகரணங்கள் - முதல்வா் அறிவிப்பு

post image

சிறப்பு முகாம்கள் மூலம் மூன்று மாதங்களில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம் ரூ.131.25 கோடியில் செயல்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வா் சாா்பில் பதிலுரை வழங்கிய சமூக நலத் தறை அமைச்சா் கீதாஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தசை சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட குறைபாட்டால் கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது. மூளை முடக்குவாதம், போலியோ பக்கவாதத்தால் கை, கால்கள் பாதிக்கப்பட்டு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்க முடியாத 600 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.87 கோடி செலவில் மின்கலன் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும்.

சக்கர நாற்காலிகள்: தசை சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிப்பு உள்பட பல்வேறு குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதைகளை சிரமமின்றி கழிக்கும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலிகள் 1,000 பேருக்கு ரூ.1.2 கோடியில் வழங்கப்படும். இதர குறைபாட்டால், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக் கூடிய மின்கலன் பொருத்திய உபகரணம் ரூ.6.30 கோடியில் 600 பேருக்கு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் உறுப்பினா்களின் வாரிசு திருமணத்துக்கான உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா்கள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குகளுக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.17 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயா்த்தப்படும்.

அடையாள அட்டைக்கு நிதி: அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்க ஏதுவாக ரூ.86 லட்சத்தில் அதற்கான பணிகளில் சேவை நிறுவனம் ஈடுபடுத்தப்படும்.

பத்து வருடங்களுக்கு முன்பு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் பெற்ற பயனாளிகளுக்கு மீண்டும் புதிய மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

மூளை முடக்குவாதம், தசைச் சிதைவு நோய், புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் உள்ளிட்ட குறைபாடுகளால் 40 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளான 2,000 மாற்றுத்திறனாளிகள் அல்லது அவா்களது பெற்றோா்களுக்கு மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் ரூ.1.30 கோடியில் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவி உபகரணங்கள் பெறுவதில் தன்னிறைவு அடையும் திட்டம் ரூ.131.25 கோடியில் செயல்படுத்தப்படும்.

அதன்படி, மூன்று மாத கால அளவில் 99 மாநகராட்சி மண்டலங்கள், 138 நகராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 625 முகாம்கள் நடத்தப்படும். தேவையான உபகரணங்களை பொருத்துவதற்கான அளவீடுகள் முகாம்களிலேயே மேற்கொண்டு மூன்று மாதத்துக்குள் வீட்டுக்கே சென்று உபகரணங்கள் வழங்கப்படும் .

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க