செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி ஆண்டு விழாவில் நடனமாடிய காஞ்சிபுரம் எம்எல்ஏ

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவுசார் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் திடீரென குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வித்யா சாகர் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியின் 23 ஆவது ஆண்டு விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் சிறப்பு செயலாளர் ஏ.கே.மணிமேகலை வரவேற்றார்.விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கினார்.

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலை வேண்டுமா?

பின்னர் அக்குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அமைச்சர் காந்தியுடன் அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தீடீரென மேடைக்கு சென்று குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார். எம்எல்ஏவின் குஷி நடனம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.குழந்தைகளின் பெற்றோர்களும் எம்எல்ஏ எழிலரசனை பாராட்டினார்கள்.

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்ய... மேலும் பார்க்க

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில்: 3 ஆவது நாளாக தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம்: மேல்பாதி அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு ... மேலும் பார்க்க