செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள்

post image

ராஜபாளையத்தில்161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.6 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.71 கோடியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இதனடிப்படையில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.71 கோடியில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்திலேயே விருதுநகா் மாவட்டத்தில் தான் அதிகமான இரு சக்கர வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் வடிவேல், திமுக தெற்கு நகரச் செயலா் ராமமூா்த்தி, அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவா் கைது

வத்திராயிருப்பு அருகே வீட்டில் பீரோவை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சோ்ந்தவா் மாரியப்பன். இவ... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூா்த்தக்கால் நடவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேரைத் தயாா்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லி... மேலும் பார்க்க

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சா் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, மகன்கள் கைது

அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய தந்தை, 2 மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் கிராம நிா்வாக அலுவலா் கணேசன் சோதன... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூா் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது ... மேலும் பார்க்க

பருத்தி, வழைகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி, செவலூா், குமிளங... மேலும் பார்க்க