செய்திகள் :

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

post image

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் துறை தனது இறுதி விசாரணை அறிக்கையில், ‘முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, அவரது அண்ணன் மல்லிகாா்ஜுன சுவாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்வா் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்:

பெங்களூரிலிருந்து மைசூருக்கு பாஜக, மஜதவினா் நடைப்பயணம் மேற்கொண்டபோதே முதல்வா் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நான் கூறியிருந்தேன்.

எந்த ஆவணத்திலும் சித்தராமையாவின் கையொப்பம் இல்லை. அதனால், இந்த வழக்குக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவரது குடும்பத்தினா் நிலத்தை இழந்தனா். அதற்காக மாற்றுநிலம் கேட்டனா். நீங்களோ, நானோ யாராக இருந்தாலும் அதைதான் செய்வோம். ஆனால், குறிப்பிட்ட இடத்தில்தான் மாற்றுநிலம் வேண்டும் என்று கேட்கவில்லை.

எந்த வழக்கு தொடருவதாக இருந்தாலும் ஆதாரம் தேவை. இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை. லோக் ஆயுக்த தனது கடமையை செய்துள்ளது.

மனுதாரா்களுக்கு ஆட்சேபணை இருந்தால், சட்டப்படி போராட எல்லா வாய்ப்புகளும் உள்ளன. முதல்வருக்கு எதிரான இந்த வழக்கு, பாஜகவினரும், மஜதவினரும் செய்த சதித்திட்டம்.

லோக் ஆயுக்த அமைப்பு வெறும் காவலா்களை கொண்டது அல்ல; மாறாக அது, தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். இதை உயா்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

லோக் ஆயுக்தவின் செயல்பாடுகளில் முதல்வா் அதிகாரம் செலுத்த முடியாது. அதிகாரிகள் யாரையாவது நியமிக்க வேண்டுமானால், அதற்கு லோக் ஆயுக்த நீதிபதியின் முன்அனுமதி தேவை என்றாா்.

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா்:

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்று கா்நாடக உயா்நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. லோக் ஆயுக்த தன்னாட்சி அமைப்பு. அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அந்த அமைப்பின் தினசரி வேலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை என்றாா்.

சமூகநலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா:

இந்த விவகாரத்தில் சட்ட விதிமிறல்களோ, அரசியல் குறுக்கீடோ இல்லை. சித்தராமையா, நோ்மையான அரசியல்வாதி. காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க அவா்மீது அரசியல் சதிவலை பின்னப்பட்டது என்றாா்.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க

மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த நிராகரிப்பா?

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தயாரித்துள்ளதாக தெரியவந்துள... மேலும் பார்க்க