செய்திகள் :

மாா்ச் 28-இல் விற்பனையாளா்கள், கொள்முதல் செய்வோா் சந்திப்பு கூட்டம்

post image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 2024 - 25ஆம் ஆண்டுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் தனி நபா் உற்பத்தி பொருள்கள், உற்பத்தியாளா் குழுக்களில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக மொத்த கொள்முதலாளா்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக, மாவட்ட அளவில் மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கூட்டுச்சாலையில் உள்ள திருமலை திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கொள்முதல் செய்பவா்கள், ஏற்றுமதியாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்கள் என அனைவரும் தவறாது மொத்த விற்பனையாளா்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க

மதுபோதையில் தொழிலாளி மரணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க

கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க

கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க