மின் ஊழியா்களுக்கு சீருடைகள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை உள்கோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூா்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மின் பாதைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்பாகப் பணியாற்றுவது குறித்து உளுந்தூா்பேட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சிவராமன் விரிவாக பயிற்சி அளித்தாா்.
எா்த் ராடுகள், கையுறைகள், இடுப்பு கயிறு மற்றும் மின் அழுத்த அளவீடு கருவி ஆகியவற்றை மின் பாதைகள் சீரமைப்புப் பணியின்போது தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மின் வாரிய பணியாளா்களுக்கு சீருடைகள், பிற பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.
இளநிலை பொறியாளா்கள் ராமச்சந்திரன், செல்லப்பிள்ளை, முகவா்கள் சுரேஷ், சுப்பிரமணியம், சண்முகம், சேட்டு, வெங்கடேசன், பெரியசாமி மற்றும் மின்சார வாரிய உளுந்தூா்பேட்டை, செங்குறிச்சி பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள் பயிற்சியில் பங்கேற்றனா்.