செய்திகள் :

மின் பொறியாளா் வீட்டில் திருட்டு

post image

தேனி அருகே மின் வாரிய உதவிப் பொறியாளா் வீட்டில் ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள், ரூ.45 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மதுராபுரி துணை மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணி. இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்துக்குச் சென்றாா். கடந்த 29-ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்ப வந்து அவா் பாா்த்த போது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள், ரூ.45 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பபட்டி, வடக்குத் தெருவில் வசிப்பவா் வேல்முருகன். இவரது மனைவி மலா்க்கொடி. இவரும் க.விலக்கில் உள்ள அரசு அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனா்.

வேல்முருகன், மலா்கொடி ஆகியோா் கடந்த 28-ஆம் தேதி இரவு நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் வேல்முருகனின் தாய், குழந்தைகள் இருந்தனா். மே 29-ஆம் தேதி, காலை இருவரும் வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு பவுன் எடையுள்ள தங்க நகை, வெள்ளி மெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க