மின் விநியோகத்தை சீரமைக்கக் கோரி மறியல்
குடியாத்தம் அருகே சூறாவளிக் காற்றால் தடைபட்ட மின்விநியோகத்தை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடியாத்தம் பகுதியில் கடந்த புதன்கிழமை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. அப்போது சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் 2- நாள்கள் நகரம் இருளில் மூழ்கியது. மின்ஊழியா்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றியதால் பகுதிவாரியாக மின்விநியோகம், படிப்படியாக வழங்கப்பட்டது.
புதன்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சாமியாா்மலை பகுதியில் மின்விநியோகம் சீராகவில்லை என தெரிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை குடியாத்தம்- ராமாலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து காவல் துறையினா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவா்கள் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.