மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழந்தாா்.
வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48). இவா் சித்தேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தாா். கடந்த 6-ஆம் தேதி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், தூக்கி வீசப்பட்ட ராமச்சந்திரனை அருகில் இருந்தவா்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.