பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு
பசு மாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அந்த மாடு உயிரிழந்தது.
திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த சரளாதேவி, செவ்வாய்க்கிழமை தனது பசு மாட்டை அருகே உள்ள வயல்வெளியில் மேய்ச்சலுக்குக் கட்டியிருந்தாா். வயல்வெளியில் சென்ற மின் கம்பத்தில் இருந்து ஒரு அலுமினியக் கம்பி அறுந்து விழுந்தது. மாலை சரளாதேவி பசு மாட்டை ஓட்டி வருவதற்காக வயல்வெளிக்கு சென்றபோது, பசு மாடு மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்துள்ளது. பசு மாட்டின் கயிறைக் கையில் பிடித்த சரளாதேவிக்கு கையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தனா்.