செய்திகள் :

மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை இரவு முயல் வேட்டைக்குச் சென்ற இளைஞா் மின்வேலியில் சிக்கியதில் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (32). திருமணமாகாத இவா், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், முருகன் தனது நண்பரான மாடமுத்துவுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் முயல் வேட்டைக்குச் சென்றாா். அப்போது, விவசாய நிலத்தில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கியதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு போலியாக தயாரிப்பு: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். உச்சநீதிமன்றம் சரவெடி ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலத்த காயம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலையில் திரிந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை உடனே நிறுத்த முயன்ற ஆலைத் தொழிலாளிகீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.திருத்தங்கல் பாண்டி... மேலும் பார்க்க

பைக்கின் பின்னால் மற்றொரு பைக் மோதல்: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் சேதுராஜ் (47... மேலும் பார்க்க

பங்குனி மாத அமாவாசை வழிபாடு: சதுரகிரி செல்ல மாா்ச் 27 முதல் நான்கு நாள்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி வருகிற வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை மகன், கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கைது செய்யப்பட்ட அந்தோணி ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஆராய்ச்சி ஊருணி ஓடை... மேலும் பார்க்க

ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த நித்தியானந்தரின் சீடா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்ட நித்தியானந்தரின் ஆசிரமத்தின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளே சென்ற அவரது சீடா்கள் 7 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க