இப்படி ஒரு ஃபோன் சார்ஜரா? வந்துவிட்டது போர்டபிள் சார்ஜர்! அறிய வேண்டிய 10 அம்சங்...
மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து, லவ் டுடே படத்தை இயக்கி, நாயகனாக நடித்தார்.
அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் நாயகனாகவும் அங்கீகாரம் பெற்றார். பின், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். அதுவும் அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தற்போது, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, ‘டூட்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தானே இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்!
இதையும் படிக்க: ரூ. 50 கோடி கூட வசூலிக்காத தக் லைஃப்!